
இலங்கை மாணவர்களே உங்கள் நலனுக்காக நான் எழுதிக்கொள்வது..
இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளில், அதுவும் குறிப்பாக ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அதிகம்.
( இதுதானே புது ஸ்டைல்..) அப்படி அவர்களின் ஆசைகள் உருவாக வேண்டும்தான். (ஒரே நாட்டுக்குள்ள இருந்து என்னதான் செய்யுறது)
அதிலும் ஐக்கிய இராச்சியம் மாணவர்களின் கனவு மையமாக திகழ்கிறது.
ஆனால் தற்போது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மாணவர் விசா மூலம் கல்வி பயில சென்ற மாணவர்கள் பலர் மிகவும் கஷ்டப்படுவதாக தெரிகின்றது, குறிப்பாக அங்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளை பெறுவது மிகவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
உலக பொருளாதார வீழ்ச்சி இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆக இப்போது உள்ள சூழ்நிலையில் அங்கு கல்வி கற்பதும் கடினம் என தெரிவிக்கப்படுகின்றது, "என்னால் முடியும்" என்று கூவலிட்டு அங்கு போய் கஷ்டப்பட்டவர்கள் கஷ்டப்படுகின்றவர்கள் மிக மிக அதிகம். குறிப்பாக உறவினர்கள், சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் பிழையான தகவல்களால் அங்கு போய் கஷ்டப்படும் மாணவர்களின் நிலைமையைப்பார்க்க எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. நல்ல செல்வாக்கான மாணவர்களுக்கு அவை பெரிய பிரச்சினையாக தெரியாது, ஆனால் இங்கு நன்று கஷ்டப்பட்டு வாழ்ந்த மாணவர்கள் அங்கும் போய் கஷ்டப்பட்டால் எப்படி இருக்கும்..
இந்த வருடம் செப்டெம்பரில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் புதிய பாடங்கள் (courses) ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.எப்படியும் அடுத்த intake இல் பல மாணவர்கள் செல்வார்கள் என்பது உறுதி, ஆதலால் இங்கு உள்ள நடுத்தர மாணவர்கள் சற்று சிந்தித்து செயல் படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
good work About UK education..
ReplyDeleteஒரு புதிய நட்சத்திரம் உருவாகிவருகிறது (aravinthan)..
ReplyDelete