Tuesday, April 14, 2009

வரும் 20 20 உலகக்கிண்ண போட்டிகள் எப்படி இருக்கப்போகின்றன..?

வெறும் மூன்று மணித்தியால விளையாட்டு என்பதால் இப்போது இந்த போட்டிகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.. அதுவும் எப்போதும் சிக்ஸர் மழை என்றால் சும்மாவா இருக்கும்..

முதல் தொடர் தென்னாபிரிக்காவில் சிறப்பாக நடந்து முடிந்தது..
அடுத்த தொடர் இங்கிலாந்தில் நடக்கவிருக்கிறது.. கடந்த தொடரில் அதிரடி ஆஸ்திரேலியா அணியிலிருந்து சிறிய வங்கதேச அணிகள் வரை எல்லா அணிகளுமே அதிரடி கண்டன... ஒரே ஒரு சதம் மட்டுமே காண முடிந்தது..கிறிஸ் கேயில் வெறும் 54 பந்துகளில் 117 ஓட்டங்களை பெற்றார்..என்ன பரிதாபம்..மேற்கிந்திய அணி படுதோல்விகளுடன் அடுத்த சுற்றுக்கு கூட தெரிவாகமல் போனது..

அதைவிட பெரிய ஆச்சரியம் தன்னைவிட பலமான மேற்கிந்தியாவை மிக இலகுவாக வெற்றிகொண்டு இரண்டாம் சுற்றுக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியது.. சிறிய டெண்டுல்கர் என்று வர்ணனையாளர்களால் அழைக்கப்பட்ட அணித்தலைவர் அஷ்ரபுலின் அதிரடி ஆடம் அனைவரையும் கவர்ந்தது..குறிப்பாக அவருடைய சிக்ஸர்கள்..

வயதானாலும் என் அதிரடி ஸ்டைல் மாறவில்லை என்பதை இலங்கையின் நம்பிக்கை வீரர் ஜெயசூரிய மீண்டும் ஒருமுறை நிருபித்தார்..கென்ய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெறும் 44 பந்துகளுக்கு 88 ஓட்டங்களை குவித்தார்.. கூடவே அணித்தலைவர் மஹேல மற்றும் முபாரக் (யப்பா கடைசி ஓவர்ல நாலு சிக்ஸர்பா)
ஆகியோரின் உதவியுடன் 20-20 போட்டிகளில் எதிரணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது..

கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆஸ்திரேலியாவிற்கு இந்த முறை பெரிய அதிர்ச்சிகள் காத்திருந்தன..அதில் குறிப்பிடத்தக்கது ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தது ஆகும்..எனினும் இங்கிலாந்துடனான போட்டியில் வெற்றி பெற்றதால் சராசரி வீதம் அதிகமாக காணப்பட்டதால் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியது..எனினும் அடுத்த சுற்றிலும் அவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சிகள் காத்திருந்தன..

இன்னொருமொரு பரபரப்பான போட்டியைப்பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போட்டி. ஏற்கனவே ஸ்காட்லாந்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டது..ஆகவே இந்த போட்டி இந்தியாவுக்கு முக்கியமான போட்டி. புதிய அணித்தலைவர்களுடன் (தோனி மற்றும் மாலிக்) இரண்டு அணிகளும் களமிறங்கின. ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சிதான். சேவாக், யுவராஜ் போன்ற வீரர்கள் சோபிக்கவில்லை. எனினும் உத்தப்பா, தலைவர் தோனி மற்றும் இர்பான் பதான் ஆகியோரின் உதவியுடன் 141 ஓட்டங்களை (இப்போ இந்த ஸ்கோர் எல்லாம் ரொம்ப சுலபம்) பெற்றது. பாகிஸ்தான் வேகபந்து வீச்சாளர் ஆஸிப்பின் பந்து வீச்சு இந்திய அணியினருக்கு மிகவும் கடினமாக இருந்தது.பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தானும் இந்திய பந்துவீச்சுக்கு சரிந்த வண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய வெற்றி பெரும் என்ற நிலையில் இருந்தது. எனினும் மிஸ்பா ஹுல் ஹக் மற்றும் ஜசிர் அரபாத் ஆகியோர் இறுதிவரை போராடினர்.

(தொடரும்)

1 comment:

  1. நெல்லைத்தமிழின் திரட்டியில் இணைக்க
    nellaitamil

    ReplyDelete