Monday, April 26, 2010

ரொம்ப பெருமையா இருக்கு...



நேற்று நடந்த போட்டியில் சென்னை வெற்றிபெற்றது அனைத்து தமிழர்களும் sorry கிரிக்கெட் ரசிகர்களும் அறிந்த விடயம். நேற்றைய வெற்றி இலக்கு மும்பை அணிக்கு மிகவும் இலகுவான ஒன்றுதான். இருந்தாலும் தேவையில்லாமல் துடுப்பாட்ட வரிசையை மாற்றியமைத்தது மும்பை அணியின் தோல்விக்கு முதல் காரணம். போலர்ட் கொஞ்சம் முதல்ல வந்திருந்தா சென்னைக்கு சங்குதான்..

சரி அத விடுங்க.

நான் ஒரு விஷயத்த நினைச்சு ரொம்ப பீல் பண்ணுறேன்.

தொட்டதுக்கு எல்லாம் சச்சின் 200 , சச்சின் கடவுள் அது இதுன்னு பதிவு போடுறிங்க. facebookல status போடுறிங்க, அப்போ ஏன் ஐயா நேற்றைய மேட்ச்ல மட்டும் அவருக்கு சப்போர்ட் பண்ணாம நேற்று வந்த தோனிக்கு சப்போர்ட் பண்றீங்க. உடனே "நான் தமிழன் அதுதான் சென்னைக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு" சொல்லுவிங்களே. வேணாம்பா வேணாம், இந்த விளையாட்டுல சரி கொஞ்சம் "இனம் பற்றிய வார்த்தைய" பாவிக்காம இருங்க, உண்மையின் படி நீங்க கிரிக்கெட் ரசிகர் என்றால் நீங்க சப்போர்ட் பண்ண வேண்டிய அணி சென்னைக்கு இல்ல, மும்பைக்குதான். நேத்து வந்த வீரர்கள்தான் சென்னையில விளையாடுறாங்க (முரளி தவிர..), ஆனால் மும்பையில் ஒரு முதிய சிங்கம், பல இடங்களில் இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய அந்த புயல் விளையாடுதுன்னு ஒருத்தனாச்சும் நினைச்சிங்களா. ஆனாலும் என்ன செய்ய அவங்க தோத்துட்டாங்க. சரி விடுங்க.

ஆனால் இனிமேல் நீங்க அந்த சிங்கத்த பாராட்டி ஒரு பதிவும் போடதிங்க..

உங்கள எல்லாம் நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு.. :-(..

வாழ்க தமிழர்..

தப்பா சொன்னா மன்னிச்சிடுங்க..

1 comment:

  1. நியாயமான கோபம் தான். எண்ண காரணமோ யார் அறிவார்.

    ReplyDelete