Thursday, September 9, 2010

தமிழ் தளங்களில் தொடரும் இனவெறி மதவெறி Comments..

நிறைய நாளுக்கு பிறகு ஒரு பதிவு எழுதுகிறேன்.

அண்மைக்காலமாக நான் சில தமிழ் இணையதளங்களை வாசித்துக்கொண்டு வருகிறேன். அவற்றில் ஒரு சில வாசகர்கள் எழுதும் comments என் மனதை மிகவும் புண்படுத்தும் வண்ணம் உள்ளன. இணையதளங்களின் பெயரை சொல்ல கொஞ்சம் யோசனையாக இருக்கிறது, இருந்தாலும் சொல்கிறேன். thatstamil என்ற ஒரு தமிழ் இணையதளம் நான் அதிகமாக பார்க்கும் ஒரு தளம், அவற்றில் செய்திகளுக்கு கீழ் வாசகர்களின் comments இருக்கும். அவற்றை பார்க்கும்போது எங்களுக்கே ஒருவித கவலையை உண்டாக்கும்.. அந்தளவுக்கு இனவெறி மற்றும் மதவெறி வார்த்தைகள் நிறைந்திருக்கும்.

சில உதாரணங்கள்,
1 ஒபாமாவை நிறைய பேர் கறுப்பு நாய் (மன்னிக்கவும்) என்றும், அவர் பின்பற்றும் மதத்தையும் ஏசியமை..
2 வடஇந்தியர்கள் மற்றும் அவர்கள் பேசும் மொழி பின்பற்றும் இனங்கள் ஆகியவற்றை ஏசியமை..
3 ஏன்? ரஜினியை கூட விட்டு வைக்கவில்லை..
4 பலதரப்பட்ட இரட்டை வார்த்தைகள், தகாத வார்த்தைகள், ஒருவர் பதிலளித்தால் மற்றவர் அவருடைய அம்மாவை கூட தகாத வார்த்தைகளால் இழுப்பார்..

இன்டர்நெட் பாவிப்பவர்களை எல்லாம் பொதுவாக உலகம் அறிந்தவர்கள் என்று பலர் கூறுவார். ஆனால் அவர்களா இப்படி எல்லாம் பேசுகின்றனர் என்று நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

தமிழன் நன்றியுள்ளவன், வந்தாரை வாழவைப்பவன் , எதிரியின் திறமைகளை கூட பாராட்டுபவன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறார்களே.
அவங்களா இப்படி பேசுறாங்க. அதுவும் இனவாதம்? சரி. இலங்கையில்தான் யுத்தம் நடந்துச்சு, இலங்கை அரசை ஏசுறாங்க.. அதுல ஒரு அர்த்தம் இருக்கு.. (அதுக்காக இலங்கை வாழ் சிங்கள மக்களை ஏசவேண்டம், இனம் வேறு அரசியல் வேறு..) அதை விட்டுட்டு சம்பந்தமேயில்லாம தேவையில்லாத செய்திகளில் தகாத வார்த்தைகளை பதிகின்றனர். ஏச விருப்பம் என்றால் அதை நீதியாக விமர்சிக்கலாம், அதற்காக இப்படியெல்லாம் ஏசுவது மிகப்பெரிய தவறு. (அது சரி, நான் சொல்லி இவங்க கேட்கவா போறாங்க)

இந்த செய்தியை படிச்சிட்டு என்னோட குடும்பத்தை கூட பலர் தகாத வார்த்தைகளால் திட்டலாம். பரவாயில்ல.. உண்மைக்கும் நேர்மைக்கும் காலம் இல்லை.

இனவாதம் மதவெறி இல்லாத உலகம்? என்னைபொறுத்த வரை ஒரு பகல் கனவுதான்.. :( :( :(..

No comments:

Post a Comment